மாயமான, பிளஸ் 2 படிக்கும் மூன்று மாணவியர், ஊட்டியில் மீட்கப்பட்டனர்.
சேலம், வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப்பிரிவில் படிக்கும், 17 வயதுடைய, மூன்று மாணவியர், நேற்று முன் தினம், மாயமாகினர். பெற்றோர் புகாரை அடுத்து, வாழப்பாடி போலீசார்,
மூவரையும் தேடி வந்தனர்.நேற்று முன் தினம் இரவு, 10:00 மணியளவில், ஊட்டி பஸ் ஸ்டாண்டில், மாணவியர் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊட்டி அனைத்து மகளிர் போலீசார், அவர்களை மீட்டு, சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சேலம் நீதிமன்றத்தில், இன்று மாணவியர் ஆஜர்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர். பின், அவர்கள் மாயமான காரணம் தெரியவரும்.
சேலம், வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப்பிரிவில் படிக்கும், 17 வயதுடைய, மூன்று மாணவியர், நேற்று முன் தினம், மாயமாகினர். பெற்றோர் புகாரை அடுத்து, வாழப்பாடி போலீசார்,
மூவரையும் தேடி வந்தனர்.நேற்று முன் தினம் இரவு, 10:00 மணியளவில், ஊட்டி பஸ் ஸ்டாண்டில், மாணவியர் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊட்டி அனைத்து மகளிர் போலீசார், அவர்களை மீட்டு, சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சேலம் நீதிமன்றத்தில், இன்று மாணவியர் ஆஜர்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர். பின், அவர்கள் மாயமான காரணம் தெரியவரும்.