ரூபாய் நோட்டை மாற்ற கட்டுப்பாடு ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!!

 பழைய ரூபாய் நோட்டை மாற்ற, புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.



என்ன பிரச்னை?

அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால், தெருக்களில்கலவரம் தான் நடக்கும்.

தற்போது பிரச்னை தீவிரமாக உள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை தான் மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால் ரூ.100 நோட்டுக்களுக்கு என்ன ஆனது? கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றும் அளவு ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன பிரச்னை நிலவுகிறது. பணம் அச்சிடுவதில் பிரச்னை உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.


நிவாரணம்:

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், பணம் அச்சிடுவதில் மட்டும் பிரச்னை இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக்கிளைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது. ஏ.டி.எம்., மையங்கள் மறு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள், வர்த்தகர்கள், திருமணம் ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...