அரசு பணியாளர் தேர்வா? : வாட்ச், ஷூ அணிய தடை!!!

தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் அரசு பணியாளர் தேர்வு நடக்கவுள்ளது; எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த தேர்வை எழுத உள்ளனர்.



தேர்வு எழுதுவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்வு அறைக்கு, மொபைல் போன், கால்குலேட்டர் உட்பட, மின்னணு பொருட்களை எடுத்து வரக் கூடாது; வாட்ச், ஷூ அணிந்து வரவும், பர்ஸ் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது; உடலில், 'டாட்டூ' வரைந்திருக்க கூடாது. பெண்கள், தங்க நகைகள் அணிந்து வரவும், கைகளில் மருதாணி வைத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...