ஓய்வுக்கால ஊழியரின் உயிரை உறிஞ்சும் அட்டைகள் !

CPS NEWS:

Forwarded

 தலைமையாசிரியரும் தென்காசி கருவூல அலுவலர்களும்.

நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா
ஆனைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
காவலராக பணியாற்றி ஓய்வுக்குப் பின்னர் மரணம் அடைந்த தந்தையின் (CPS) ஓய்வுக்காலப் பலனுக்காக 4 ஆண்டுகளாக அலைந்த நிலையில் அரசு விதிகளின்படி கருவூல இயக்குநரகம் ஓய்வூதிய செட்டில்மென்ட் வழங்கி ஆணை பிறப்பித்தது.


 இறந்தவர்கள் கிடக்கட்டும் உயிரோடு இருப்பவர்களிடம் லஞ்சமாக பறிக்கத் துடிக்கிறது, பள்ளி நிர்வாகம்.

ஓய்வூதியக் கோப்புகளைத் தயார் செய்து பலனைப் பெற்றுத் தருவதே ஊதியம் வழங்கும் அலுவலரின் பொறுப்பு. பொறுப்புணரா தலைமையாசிரியரும்  கருவூல அலுவலர்களும் ஓய்வுக்கால ஊழியரின் உயிரை உறிஞ்சும் அட்டைகளாய் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன.

அரசு பறித்தது சொச்சம், அதிகாரம் பறிப்பது மிச்சமென மாறி வருகிறது, புதிய ஓய்வூதியத் திட்டப் பங்காளிகளின் நிலை.


ஒரு மாத அழைக்கழிப்பிற்கு பின்
இலஞ்சம் ரூ.2000/- வழங்கியதால் cps settlement தொகை கிடைத்தது.

வாழ்க பணநாயகம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...