10-ஆம் வகுப்பு தகுதிக்கான வேலை... ஆயிரக்கணக்கில் குவிந்த பட்டதாரிகள்!

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கால்நடை மருந்துவ இயக்குநர் அலுவலகத்தில் இன்று திருச்சி, அரியலூர், தேனி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் இருக்கும் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடக்கிறது.



இந்த பணிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும், ஆனால் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் அழைப்பாணையுடன் குவிந்திருப்பதால் நீண்ட வரிசை நீண்டுகொண்டே போகிறது. அலுவலக உதவியாளர் பணிக்கு குவிந்துள்ள பட்டதாரிகள், 'தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவது இதைப்பார்த்தாலே தெரியும். சரியான வேலைவாய்ப்பை உருவாக்காதது எங்கள் தவறா' என புலம்பினார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...