118 பயணிகளுடன் சென்ற லிபியா விமானம் மால்டாவிற்கு கடத்தப்பட்டது. கடத்தல்: லிபியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் லிபியாவின் தெற்மேற்கு நகரில் உள்ள செபா நகரிலிருந்து தலைநகர் திரிபோலிக்கு சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 118
பயணிகள் இருந்துள்ளனர். விமானத்தை கடத்தியவர்கள் கையில் கையெறி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் விமானத்தை வெடிக்க வைக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். உஷார்: விமானத்தை 2 கடத்தல்காரர்கள் கடத்தியுள்ளதாக மால்டா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் கடத்தப்பட்டது தொடர்பாக தயாராக உள்ளதாகவும், அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் மால்டா பிரதமர் கூறியுள்ளார்.
பயணிகள் இருந்துள்ளனர். விமானத்தை கடத்தியவர்கள் கையில் கையெறி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் விமானத்தை வெடிக்க வைக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். உஷார்: விமானத்தை 2 கடத்தல்காரர்கள் கடத்தியுள்ளதாக மால்டா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் கடத்தப்பட்டது தொடர்பாக தயாராக உள்ளதாகவும், அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் மால்டா பிரதமர் கூறியுள்ளார்.