சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 15 வரை ரூ. 500 செல்லும்!

நாட்டில் பணத்தட்டுபாடு அதிகளவில் ஏற்பட்டு இருப்பதால், அதை சமாளிக்கும் முயற்சியாக மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டை டிசம்பர் 15 ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக,பண மதிப்பிழப்பு அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. அதிலிருந்து, உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவித்தது. அதன்பிறகு, ஒரு சில இடங்களில், அதாவது பெட்ரோல் பங்க், சுங்க சாவடி போன்ற இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது. பின்பு, டிசம்பர் 2ஆம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்னும் நாட்டில், பணப்புழக்கமும், சில்லறைத் தட்டுப்பாடும் சீராகாத காரணத்தால், காலக்கெடு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்,டெபிட்,கிரெடிட் கார்டை வைத்து ஸ்வைப் இயந்திரம் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி வரை சுங்க சாவடிகளில் 500 ரூபாய் செல்லும் என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...