போலீஸ் ஸ்டேஷன்களில் இனி ‘ரிசப்ஷனிஸ்ட்’..! 3,647 பெண் போலீசார் நியமனம்!!


தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரிடம் கரடுமுரடான அணுகுமுறையை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல் நிலையங்களுக்கு புகாரளிக்க வருவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மேலும்,
காவல் நிலையங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காவல் நிலையங்களில் புகாரளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிய, 1,007 பெண் போலீசார் உள்ளிட்ட 3,647 பேர் காவல்நிலை வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள வரவேற்பாளர்களுக்கு, சென்னை காவலர் பயிற்சி பள்ளி, மாவட்டம், மாநகர தலைமை அலுவலகங்களில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், புகாரளிக்க வருவோரை வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிந்து மேலதிகாரிக்கு தெரிவிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் தேவைகளை உணர்ந்து, நல்ல முறையில் அணுக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...