டி.சி.எஸ். தொடர்ந்து நான்காவது வருடமாக முதலிடம் !

அதிக லாபம் பெரும் நிறுவனங்களின் பட்டியலில் டி.சி.எஸ். தொடர்ந்து நான்காவது வருடமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ‘மோதிலால் ஆஸ்வாஸ்’ நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக அதிக லாபத்தை பெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுனவங்களின் இணைவு, பிரிவு, பங்கு கொடுத்தல், பெறுதல்
போன்றவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் டி.சி.எஸ். நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் தொடர்ந்து நாங்காவது முறையாக முதலிடத்தை பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் HDFC வங்கி உள்ளது. இந்த பட்டியலில் உள்ள முதல் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.28.4 லட்சம் கோடி மதிப்புக்கு உயர்ந்திருக்கிறது. ‘அஜந்தா’ நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகவும் ‘ஏசியன் பெயின்ட்ஸ்’ நிறுவனம் சீரான வளர்ச்சியை தொடர்ந்து வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன. மெட்டல் மற்றும் சுரங்கத்துறையின் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...