பொதுமக்களை தேவையில்லாமல் பீதியடைய வைக்காதீர்கள் !!

தற்போது தங்க நகை குறித்து பரவி வரும் விபரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஊடகங்களில் ஒளிபரப்பான தகவலாகும். தங்க நகை கட்டுப்பாடுகள் குறித்த இந்த ஷரத்துகள் ஏற்கெனவே வருமான வரி சட்டத்தில்  இருக்கிறதாம். ஆனால் 30% இருந்த வரி

மட்டும் 60% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல். எனவே ஒரு தகவலின் உண்மை நிலை அறியாமல் தயவுசெய்து பகிராதீர்கள் நண்பர்களே.

*முழு விபரம் கீழே....*

*ஒருவர் தமது வருமானத்தைக் கணக்குக் காட்டி அதில் எவ்வளவு  வேண்டும் என்றாலும் தங்கம் வாங்கி வைத்துக் கொள்ளாலாம்* என்ற விதியில் *எவ்வித மாற்றமும் கிடையாது*. அப்படியே தொடர்கிறது.

*கணக்குக் காட்டாதவர்கள்* வைத்திருக்க அனுமதிக்கப்பட்டத் தங்கத்தின் அளவு, மீறினால் அதற்கான அபராதம் என்ன என்பதை *வருமான வரி சட்டம் 1916* நிர்ணயிக்கிறது.

*மீறினால் அதற்கான அபராதம்* என்ன என்பதில் மட்டுமே *தற்பொழுது மாற்றம்* கொண்டுவரப் பட்டுள்ளது. அபராதம் அதிகரித்து இருக்கிறது.

*வருமான வரி சட்டம் 1916*
அனுமதிக்கும் தங்க அளவீடு:

*திருமணமான பெண்*
500 கிராம் (62.5 பவுன்),
*மணமாகாத பெண்*
250 கிராம் (31.25 பவுன்),
*ஆண் (எப்பொழுதும்)*
100 கிராம் (12.5 பவுன்)

உதாரணமாக அம்மா, அப்பா, பையன், பெண் என 4 பேர் உள்ள குடும்பம் எந்த கணக்கும் இல்லாமல் 119 பவுன் [62.5 + 31.5 + 12.5 + 12.5] வைத்திருக்கலாம்.

கூட்டுக் குடும்பமாக இருந்தால் தாத்தா, பாட்டி பெயரில் மேலும் 75 பவுன் [62.5 + 12.5] வைத்திருக்கலாம்.

*இவற்றிற்கு கணக்கு காட்டத் தேவை இல்லை*. ஆனால் அதற்கும் அதிகமாகத் தங்கம் இருந்தால் அதற்கு முறையான வருமானத்தில் வாங்கியதற்கான ஆவணம் இருக்க வேண்டும். சேமிப்பு அல்லது பரம்பரை நகை என்பதை நிரூபித்தால் அதற்கும் விலக்கு உண்டு. இல்லை என்றால் அந்த நகைகளுக்கு 30% வரி அபராதமாக விதிக்கப்படும்.

இது எல்லாமே *ஏற்கெனவே உள்ள சட்டம்* தான்.

*புதிய விதிகளின் படி* இப்போது நடைமுறையில் விதிக்கப்படும் 30% வரிக்குப் பதில் 60% வரி அபராதமாக விதிக்கப்படும்.

*மற்றவை மாற்றமில்லை!*
*பயம் தேவையில்லை!*

நன்றி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...