முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம்: அப்போலோ புதிய அறிக்கை !!


முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உடல்நலம் பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். 73 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் முதல்வரின் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியதால் நேற்றிரவு கடைகள், பெட்ரோல் பங்க் மூடப்பட்டது, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை இயக்குநரகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் எக்கோ கருவியின் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...