தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகள் அறிவிப்பு.!!!

ஜெயலலிதா மறைவு மற்றும் வர்தா புயலால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் முதல் வாரம் தொடங்கிய அரையாண்டு தேர்வு, முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால்

தள்ளிவைக்கப்பட்டது. மேலும், கடந்த 12ஆம் தேதி வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தள்ளிவைக்கப்பட்டிருந்த அரையாண்டி தேர்வுகள் ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், டிசம்பர் 14ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்ட தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...