வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் ஏப்.,1 முதல் அமல்!!!

ஜி.ஏ.ஏ.ஆர்., எனப்படும், பொது வரி ஏய்ப்பு தடுப்பு சட்ட விதிகள், வரும், ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

ஜி.ஏ.ஏ.ஆர்.,:

மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில், வரி ஏய்ப்பு நடைபெறுவதை தடுக்கும்
நோக்கில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஜி.ஏ.ஏ.ஆர்., எனப்படும், பொது வரி ஏய்ப்பு தடுப்பு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அமல்:

திட்டமிட்டபடி, ஏப்., 1ல் துவங்கும், 2017 - 18ம் நிதியாண்டில், இது நடைமுறைக்கு வரும் என, மத்திய நேரடி வரி வாரியம், நேற்று தெரிவித்துள்ளது. இதனால், வெளிநாட்டு நிதி மேலாண்மை நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளும், வரிச்சலுகை பெறாத முதலீடுகளுக்கு, எந்த பிரச்னையும் ஏற்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

வரி ஏய்ப்பை தடுப்பதற்கான, ஜி.ஏ.ஏ.ஆர்., விதிமுறைகள், பிரிட்டன், சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அமலில் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...