'மாடுகளுக்கு எந்த அளவுக்கு பொங்கல் தரலாம்' என்பது குறித்து, கால்நடை துறை அறிவுறுத்தியுள்ளது. வரும், ௧௫ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தில் பிரதான பங்கு வகிக்கும் மாடுகளை, அன்று குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் அடித்து, பொங்கல் வைத்து
வழிபடுவர். அப்போது, மாடுகளுக்கு பொங்கல் ஊட்டுவர். தற்போது, மாட்டின் உரிமையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சம்பிரதாயத்துக்காக பொங்கல் தருகின்றனர். 'அளவுக்கு அதிகமாக பொங்கல் சாப்பிடும் மாடுகள், உடல் உபாதைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது' என, கால்நடை துறை எச்சரித்துள்ளது.
வழிபடுவர். அப்போது, மாடுகளுக்கு பொங்கல் ஊட்டுவர். தற்போது, மாட்டின் உரிமையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சம்பிரதாயத்துக்காக பொங்கல் தருகின்றனர். 'அளவுக்கு அதிகமாக பொங்கல் சாப்பிடும் மாடுகள், உடல் உபாதைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது' என, கால்நடை துறை எச்சரித்துள்ளது.