SSTA சார்பாக அனைத்து ஆசிரியர்களும் இன்றிலிருந்து (19.01.2017) கருப்புச்சட்டை அணிந்து பள்ளிசெல்லவும்,ஓரிரு நாளில் போராட்டம் முடிவுக்கு வராவிட்டால் போராட்டத்தில் SSTA ஈடுபடுவோம் !!!

🌹🌹*BREAKING* *NEWS*🌹🌹

*SSTA இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்* *சங்கம்*

*மாநில அமைப்பு*

தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் விதமாக நமது பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கக் கோரியும்,*பீட்டா* அமைப்பை தடைசெய்யக்கோரியும் இலட்சக்கனக்கான இளைஞர்கள்,பெண்கள், மாணவ மாணவியர் பலநாட்களாக அறவழியில் போராட்டங்களை நடத்திவரும்
நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுவரையில் எந்த ஒரு தீர்வையும் காணவில்லை.

 தமிழக ஒட்டுமொத்த இளைஞர்கள் களம் காணும் இப்போராட்டத்தில் நமது கலாச்சாரத்தை காக்கும் விதமாகவும் பண்பாட்டை போற்றும் விதமாகவும் இப்போராட்டத்திற்கு *SSTA* (இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம்) தனது முழுஆதரவையும் அளித்து
பள்ளி மாணவர்களின் நலன்கருதி அனைத்து ஆசிரியர்களும் இன்றிலிருந்து (19.01.2017) கருப்பு சட்டை அணிந்து பணிக்கு செல்வார்கள்.

மேற்கொண்டு விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

காலதாமப் படுத்தாமல் விரைந்து ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர அனுமதியும், பீட்டாவிற்கு நிரந்தர  தடையும் அளித்து போராட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 ஓரிரு நாளில் தீர்வு ஏற்படாத பட்சத்தில் நாங்களும் போராட்ட களம்காணுவோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

      இப்படிக்கு
   *SSTA* *மாநில* *அமைப்பு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...