தொலை தொடர்பு சேவையில் குறைபாடு நிறுவனங்களுக்கு ரூ.11 கோடி அபராதம்!!

தொலை தொடர்பு துறை அமைச்­சர் மனோஜ் சின்ஹா, ராஜ்­ய­ச­பா­வில் கூறி­ய­தா­வது:பல்­வேறு நிறு­வ­னங்­கள் வழங்­கும் தொலை தொடர்பு சேவை குறித்து, காலாண்­டுக்கு ஒரு­முறை, ‘டிராய்’ ஆய்வு செய்து, அது தொடர்­பான அறிக்­கையை, வலை­த­ளத்­தில் வெளி­யி­டு­கிறது. மோச­மான சேவை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­கிறது.இந்த வகை­யில், அழைப்பு துண்­
டிப்பு உள்­ளிட்ட சேவை குறை­பா­டு­க­ளுக்­காக, தொலை தொடர்பு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, 11 கோடி ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு உள்­ளது.
அதில், அதி­க­பட்­ச­மாக, ஏர்­செல் நிறு­வ­னத்­தின், ‘2ஜி, 3ஜி’ சேவை குறை­பா­டு ­க­ளுக்­காக, முறையே, 3 கோடி ரூபாய் மற்­றும் 1.56 கோடி ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு உள்­ளது.இதை­ய­டுத்து, பி.எஸ்.என்.எல்., 2.27 கோடி ரூபாய்; ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ், 89 லட்­சம் ரூபாய்; டாடா டெலி­சர்­வீ­சஸ், 84 லட்­சம் ரூபாய்; வோட­போன் 40 லட்­சம் ரூபாய்; பார்தி ஏர்­டெல், 13.5 லட்­சம் ரூபாய் என்ற அள­வில் அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு உள்­ளது.இது­த­விர, பி.எஸ்.என்.எல்., – வோட­போன் நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘3ஜி’ சேவை குறை­பாட்­டிற்­கா­க­வும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...