22ம் தேதி திமுக உண்ணாவிரதம்: ஸ்டாலின்!!!

சட்டசபையில் தாக்கப்பட்டது குறித்தும், வெளியேற்றப்பட்டது குறித்தும், தனது சட்டை கிழிக்கப்பட்டது குறித்தும் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து, வரும் 22ம் தேதி தமிழகம்

முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்க திட்டம்:

சென்னை: பத்திரிகையாளர்களிடம் பேசிய தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: திருச்சியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். காஞ்சிபுரத்தில் துரைமுருகன் பங்கேற்க உள்ளார். எம்.பி.,க்கள் கவர்னரை சந்தித்து புகார் அளித்துள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க திட்டம் உள்ளது; நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்த பின்னர் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் எனக்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...