பிளஸ்-2 பொதுத் தேர்வு : ஹால் டிக்கெட் வழங்க உத்தரவு !!

பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என, கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிளஸ்-2 மாணவர்களுக்கு, பிப்ரவரி, 20ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட் வழங்கவும், படிப்பதற்கு விடுமுறை அளிக்கவும், அரசு தேர்வுத்துறையும் பள்ளிக்கல்வித்
துறையும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்வுத் துறையின், http://www.tndge.in/ என்ற இணையதளம் மூலம், கடந்த 7ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது.

அதைப் பயன்படுத்தி, அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அவர்களிடம் அதை வழங்க வேண்டும். மேலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்காக அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...