மெரினாவில் போராட்டத்தைத் தவிர்க்க காவல்துறை கெடுபிடி தீவிரம் !!

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினாவில் போராட்டம் மூளாமல் தடுக்க காவல்துறையின் கெடுபிடி வலுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று டெல்லி சென்று
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக மக்களின் அனுமதி பெற்றே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று மெரினாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த சில இளைஞர்கள் முற்பட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை கோட்டூர் புரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, இனிமேல் முன் அனுமதி பெறாத போராட்டங்கள் நடத்தமாட்டோம் என்ற உறுதிமொழியில் கையெழுத்து பெற்ற பிறகு விடுவித்தனர்.

இதனையடுத்து, இன்று சுமார் 600 காவல்துறையினர் மெரினா கடற்கரையில் வலம் வருகின்றனர். திடீர் போராட்டம் வெடிப்பத்தைத் தவிரக்க அவர்கள் தீவிர ரோந்து மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, ஈரோட்டில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் இளைஞர்கள் வரும் வியாழக்கிழமையன்று திரள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...