கை நழுவி போகும் "கொடநாடு".....! அடுத்தடுத்து என்ன ???

கை நழுவி போகும் "கொடநாடு".....! அடுத்தடுத்து என்ன ?*

சசிகலா, சுதாகரன் , இளவரசிக்கு எதிராக வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பு, இன்று 10.30 மணிக்கு வெளியானது. இந்த தீர்ப்பில் சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், 1௦ கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


*☦🅾கொடநாடு :*

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. மேலும் கொடநாடு உள்பட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

*எந்த விஷேச சலுகையும் இல்லை :*

முன்னதாக , இதே சொத்த குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் கைதான போது, அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட A பிரிவு வசதி, சசிகலாவுக்கு வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறையில் எந்த விசேஷ சலுகையும் காட்டக்கூடாது எனவும் கடுமையாக தீர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், சசிகலா வசம் உள்ள அனைத்து சொத்துக்களும் ஒவ்வொன்றாக பறிமுதல் செய்ய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...