பி.எப்., மூலம் வீடு கட்டும் திட்டம்: மார்ச் முதல் துவக்கம் !!

பி.எப்., உறுப்பினர்களுக்கு எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வரும் மார்ச் மாதம் துவங்குகிறது.

*4 கோடி உறுப்பினர்கள்:*

இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின்
நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன; இதில், நான்கு கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

*மார்ச் முதல்..*

அதன் உறுப்பினர்களுக்கு, எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மார்ச் மாதம் துவங்குகிறது. இதன்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், வீடு கட்டும் போது, முன் பணம் மற்றும் மாத தவணை தொகையை, தங்கள் பி.எப்., கணக்கில் இருந்து செலுத்த முடியும். மேலும், மத்திய அரசின் பல்வேறு வீட்டு வசதி திட்டத்திற்கான மானியங்கள் மற்றும் உதவிகள், அவர்களுக்கு வழங்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...