சிறையில் இருக்கும் உபி எம்எல்ஏ பிரசாரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாவ் தொகுதி எம்எல்ஏ முக்தர் அன்சாரி. தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 2005ல் நடந்த, பாஜ எம்எல்ஏ கிருஷ்ணா ஆனந்த் ராய் கொலை வழக்கில் தொடர்புடைய இவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வழக்கை டெல்லி நீதிமன்றம்
விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதால் பரோல் கேட்டு அவர் விண்ணப்பித்து இருந்தார். இதை ஏற்ற விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 16 முதல் மார்ச் 4 வரை போலீஸ் காவலுடன் கூடிய பரோல் வழங்கி பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியது.
விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதால் பரோல் கேட்டு அவர் விண்ணப்பித்து இருந்தார். இதை ஏற்ற விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 16 முதல் மார்ச் 4 வரை போலீஸ் காவலுடன் கூடிய பரோல் வழங்கி பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியது.