உளவுத் துறை ஐ.ஜி. பதவியேற்று பத்து நாள்கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் உளவுத்துறை ஐ.ஜி.,யாக வடக்கு மண்டலம் ஐ.ஜி., செந்தாமரை கண்ணன் வரவிருப்பதாகவும் எம்.என். குரூப் விருப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்குமுன்பு, ஐ.எஸ். அதிகாரி தாமரைக்கண்ணன்
பெயர் லிஸ்ட்டில் இருந்தது. ஆனால் அவர் இந்தப் பதவியில் விருப்பமின்றி ஒதுங்கிக்கொண்டாராம்.
பெயர் லிஸ்ட்டில் இருந்தது. ஆனால் அவர் இந்தப் பதவியில் விருப்பமின்றி ஒதுங்கிக்கொண்டாராம்.
சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.,யாக வருவதற்கு, புட்செல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை சிட்டி கமிஷனர் ஜார்ஜ் இருவரும்தான் கடுமையான போட்டியில் இருந்து வருகிறார்கள். மாறுவேடத்தில் சட்டசபை பணிக் காவலராக செயல்பட்ட அம்பத்தூர் டி.சி., சுதாகர் டி.ஐ.ஜி., பதவி உயர்வு பட்டியலில் இருந்தவர். தற்போது காத்திருப்பு பட்டியலில் வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் இடமாற்ற ஆணை இன்று அல்லது நாளை வெளியாகக்கூடும் என்று தெரிகிறது.