அதிக மதிப்பெண் பெற பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடா?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதி மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றில் முறைகேடாக உதவுவதாக புகார் உள்ளது.

இப்பகுதி மாணவர் ஒருவரின் தாய் ’தினமலர்’ அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசுகையில், ”கம்பத்தில் சில மெட்ரிக் பள்ளிகளில், நன்றாக படிக்கும் சில பிளஸ் 2 மாணவர்கள் மீது, நிர்வாகத்தினர் அதீத கவனம் செலுத்துகின்றனர்.



தமிழ், ஆங்கில தேர்வுகள் எழுதி வெளியே வந்த மாணவரின் வினாத்தாளை பெற்று, தவறான விடை ஏதும் எழுதியுள்ளாரா என விசாரிக்கின்றனர். ஒரு மார்க் வினா தவறு என மாணவர் குறிப்பிட்டால், மிக ரகசியமாக தேர்வு அறைக்கு உடனே சென்று விடைகள் திருத்தப்படுகிறது.



இதுபோன்ற முறைகேடால் எங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படுவர். கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வதில்லை,” என்றார்.



காரணம் என்ன



தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “மெட்ரிக் பள்ளிகளிடையே தொழில் போட்டி யால், இதுபோன்ற புகார்களை திட்டமிட்டு பரப்புகின்றனர். ஆனாலும் அவற்றின் தேர்வு அறை கண்காணிப்பாளரை தினமும் மாற்றுகிறோம்.



கலெக்டர், டி.எஸ்.பி., தலைமை யில் பறக்கும் படையினர் ஆய்வு செய்கின்றனர். மருத்துவ படிப்பிற்கான ’கட் ஆப்’ பெறும் தேர்வுகளின் போது, கம்பம் பகுதி பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர்களை மாவட்டத்தில் பிற பகுதியில் இருந்து அனுப்ப உள்ளோம்.



விடைத்தாளில் விடைகளை திருத்துவது உள்ளிட்ட தவறு நடக்க வாய்ப்பே இல்லை. எனினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...