ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக 6–ந் தேதி தமிழ்நாடு முழுவதும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கியது.
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர்
விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று வரை சமர்ப்பித்தனர்.
பி.எட் பட்டதாரிகள் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றனர். அவர்களில் 4 லட்சத்து 90 ஆயிரம் பேர் பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பித்தனர். விண்ணப்பங்களை பெற நேற்று கடைசி நாளாகும்.
ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். பட்டதாரிகள் மொத்தம் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர்
விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று வரை சமர்ப்பித்தனர்.
பி.எட் பட்டதாரிகள் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றனர். அவர்களில் 4 லட்சத்து 90 ஆயிரம் பேர் பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பித்தனர். விண்ணப்பங்களை பெற நேற்று கடைசி நாளாகும்.
ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். பட்டதாரிகள் மொத்தம் 8 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.