தமிழில் 'இ - மெயில்' வசதி பி.எஸ்.என்.எல்., அசத்தல்!!

தமிழ் உட்பட, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' உருவாக்கும் செயலியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.

மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கு வலு சேர்க்க, இணையதளம் மூலம் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், 'டேட்டா மெயில்' என்ற செயலியை, பி.எஸ்.என்.எல்., உருவாக்கி உள்ளது.


இதில், தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' முகவரியை உருவாக்கலாம்.மொபைல் எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து, விரும்பிய மொழியில், விரும்பிய பெயருடன், இ - -மெயில் முகவரியை உருவாக்கலாம். கூடுதல் சிறப்பு அம்சமாக, ரேடியோ என்ற தனிப்பிரிவு உள்ளது. கணக்கு துவங்குவோர், இப்பிரிவுக்குள் சென்று, விருப்பமான பெயரில், 'ரேடியோ சேனல்' துவக்கலாம்.

இதன் மூலம், தங்களது குரலில், செய்தி உட்பட எத்தகைய கருத்துக்களையும் பேசி ஒலிபரப்பலாம். சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.
'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இதை
பதிவிறக்கம் செய்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...