பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள், நேற்று(ஏப்-25)முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர்.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தபட்டது. ஜன. 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரின் உறுதி மொழியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தபட்டது. ஜன. 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரின் உறுதி மொழியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கூறியுள்ளார்.