இந்திய சாதனை புத்தகத்தில் 3 வயது பெண் குழந்தை !!

ஒரு நிமிடத்தில், 69 தலைவர்களின் பெயர்களை கூறிய, 3 வயது பெண் குழந்தை,
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரைன் இன்ஜினியர் தினேஷ்குமார் மகள் தமிழினி, 3. இவர், ஒரு நிமிடத்தில், 69 சர்வதேச மற்றும் தேசிய தலைவர்கள், மாநில
முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களின் பெயர்களை, படத்தை பார்த்து சொல்லி சாதனை படைத்தார்.

நாமக்கல்லைச் சேர்ந்த, 5 வயது சிறுவன் ரேவந்த், ஒரு நிமிடத்தில், 66 தலைவர்களின் பெயரை கூறி படைத்த சாதனையை தமிழினி முறியடித்தார். இந்திய சாதனை புத்தக நிறுவன பொறுப்பாளர் விவேக், தமிழினியை பாராட்டி சான்றிதழ், பதக்கம் வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...