மதிப்பிற்குரிய ஐயா திரு உதயச்சந்திரன் அவர்களின் மாற்றுச்சிந்தனையின் தொடக்க ஆணையே தனியார் பள்ளி நிர்வாகிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது...!!

 பொதுத்தேர்வுகளில்  மாநில அளவில்
முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் பெயர்களையும் பள்ளிகளின் பெயர்களையும் குறிப்பிட வேண்டாம் என்ற ஆணை இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனால்

1) மாணவர்களை பந்தய குதிரைகளாக்கி பொதுத்தேர்வு முடிவுகளை கொண்டு கல்வியை வியாபாரமாக்கும் தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்கி இருக்கிறார்.


2) தமிழ் வழியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் உயரிய மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்திருப்பதால் பொதுமக்களின் பார்வையை அரசுப்பள்ளியை நோக்கி திசை திருப்பிருக்கிறார்.

3) இந்த ஆணையின் முழு பின்னணியும் அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு  கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் உள்ளது.மேலும் வருங்காலத்தில் இவர்களுக்கென்று தொழிற்ப்படிப்புகளில் சிறப்பு இடங்களை ஒதுக்கவும் வாய்ப்பிருப்பதாக மறைமுகமாக இந்த ஆணை சுட்டிக்காண்பிக்கிறது.

எந்த கோணத்தில் பார்த்தாலும் இந்த ஆணை நிச்சயம் அரசுப்பள்ளிகளின் எழுச்சிக்காக வெளியிடப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு..

ஐயா திரு.உதயச்சந்திரன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்..

ச.ஜெய்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...