தனியார் பள்ளி பஸ் டிரைவர்கள் வைத்து நாளை பேருந்து இயக்க அரசு முடிவு !!

போக்குவரத்‌துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில், பள்ளிப் பேருந்து‌ ஓட்டுநர்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்கள்,

திங்கள்கிழமை முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளனர். இதனால் அரசுப் பேருந்துகள் இயங்காத நிலை உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக, கடந்த 1‌0 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிப் பேருந்தை இயக்கி வரும் ஓட்டுநர்களைக் கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு‌ள்ளது.

இதுதொடர்பாக ஓட்டுநர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்‌தியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களிடம், சார் ஆட்சியர் மேகநாதரெட்டி,‌ துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், மோ‌ட்டா‌ர் வாகன ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியதையொட்டி, உரிய ஒத்துழைப்பை அளிப்‌பதாக ஓட்டுநர்களும் தெ‌ரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...