3ஜி சேவையில் புதிய சலுகைத் திட்டம் ஒன்றை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ரூ.444க்கு ரீச்சார்ஜ் செய்பவர்களுக்குத் தினசரி 4 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான கால வரம்பு 90 நாட்களாகும். இப்புதிய சலுகைத் திட்டத்துக்கு பி.எஸ்.என்.எல்.
சவுக்கா - 444 என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் 444 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் தினமும் 4 ஜி.பி. டேட்டாவைப் பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் வருகையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இலவசச் சலுகைகளால் இழந்த தனது வாடிக்கையாளர்களை மீட்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவுமே இதுபோன்ற சிறப்புச் சலுகைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் 309 ரூபாய்க்குத் தினசரி 1 ஜி.எபி. அளவிலான 4ஜி டேட்டாவை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. எனினும் இதன் கால வரம்பு ஒரு மாதம் மட்டுமே. பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள புதிய சலுகையில் மூன்று மாதங்களுக்கு இலவச 3ஜி டேட்டாவைப் பெற முடியும் என்பதால் இத்திட்டத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது.
சவுக்கா - 444 என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் 444 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் தினமும் 4 ஜி.பி. டேட்டாவைப் பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் வருகையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இலவசச் சலுகைகளால் இழந்த தனது வாடிக்கையாளர்களை மீட்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவுமே இதுபோன்ற சிறப்புச் சலுகைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் 309 ரூபாய்க்குத் தினசரி 1 ஜி.எபி. அளவிலான 4ஜி டேட்டாவை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது. எனினும் இதன் கால வரம்பு ஒரு மாதம் மட்டுமே. பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள புதிய சலுகையில் மூன்று மாதங்களுக்கு இலவச 3ஜி டேட்டாவைப் பெற முடியும் என்பதால் இத்திட்டத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது.