ஐஐடி.,யில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!!


நாடு

முழுவதிலும் உள்ள ஐஐடி மற்றும் என்.ஐ.டி.,க்களில் மாணவர்கள் சேர்க்கை
ஐஐடி நுழைவு தேர்வில் இந்தி வினாத்தாளில் பிழை இருந்ததன் காரணமாக சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி பிழையில்லாத வினாத்தாள் கொண்டு ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் இந்த சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த ஐஐடி நிர்வாகம், வினாத்தாளில் பிழை இருப்பது தெரிந்ததும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது போன்ற அச்சுப்பிழைகள் இனி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விளக்கத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மாணவர்கள் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், சலுகை மதிப்பெண்ணிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...