அண்டார்டிக்காவில் பனிப்பாறை பனித்தட்டில் இருந்து விலகியது கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்!!!



அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறை தொடர்களில் ஒரு பிரிவு லார்சன்
என்று அழைக்கப்படுகிறது. அதில் ஏ.பி.சி என்று மூன்று
பிரிவுகளில் பனிபாறை தொடர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சி பிரிவில் இருந்த ஏ-68 என்ற பனிப்பாறை பனித்தட்டில் இருந்து பிரிந்து உள்ளது டிமோஎஸ்-1 என்ற செயற்கைகோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறை  இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு பனிப்பாறை விலகி வருவதாக செயற்கைகோளில் தெரியவந்துள்ளது. இந்த் பிளவு பட்ட பனிப்பாறை தற்போது அண்டார்டிக்கா கடலில் ஒன்றரை கி.மீ தூரம் கடந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுவதற்கு முக்கிய காரணம் உலக வெப்பமயதால் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சில விஞ்ஞானிகள் இது சில இயற்கையான நிகவு தான் என்று தெரிவித்துள்ளனர். சில விஞ்ஞானிகள் உலக
வெப்பமயமாதல் காரணமாக கூட இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பனிப்பாறை விலகி உள்ளதால் கடல்நீர்மட்டம் உயரும் என கலிபோர்னியா ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...