சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்வாகி உள்ளனர்.

புதுடெல்லி:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக முதல்நிலை தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைப்பெற்றது.

இந்நிலையில், யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்வாகி உள்ளனர்.

தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்கள் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

குடியுரிமை மற்றும் வனத்துறையில் உள்ள 980 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. அடுத்தக்கட்டமான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...