தண்டனை
விதிப்பது குறித்து, தேர்தல் ஆணையம் தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவிக்காதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வாழ் நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.இது குறித்து தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், அரசியலில் குற்றவாளிகள் இருப்பதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. அதேநேரத்தில், தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பதை ஆதரிக்கவில்லை என கூறப்பட்டது.தொடர்ந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஏன் தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தனது நிலையை தெளிவுபடுத்த தேர்தல் கமிஷன் மறுக்கிறது. நீங்கள் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளது.