மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும், புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான
‘இன்டலிஜென்ஸ் பீரோ’ (ஐ.பி) அமைப்பில் காலியாக உள்ள மத்திய துணை உளவு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1300
வயது வரம்பு: 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: டயர் 1 மற்றும் டயர் 2 என்ற இரண்டு நிலைகளாகத் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு நடத்தப்படும்.
கடைசி நாள்: 2/9/17
மேலும் விவரங்களுக்கு www.mha.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
