இன்று(22.09.2017)மதுரையில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு தீர்மானங்கள் !!

(1)ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயிர்க்கோரிக்கையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை ஜேக்டோ ஜியோ தொடர்ந்து சமரசமின்றிப் போராடும்.


*(2)ஜேக்டோ ஜியோவின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 08.10.2017 அன்று போராட்ட விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும்.*

*(3)ஜேக்டோ ஜியோவின்   வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நாளான 23.10.2017 வரை ஜேக்டோ ஜியோவின் இன்றைய நிலை தொடரும்*

*(4)உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும் என்ற தேதியை 13.10.2017ல் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்காவிட்டால் 15.10.2017 அன்று ஜேக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கையைவிவாதிப்பது*



*(5)23.10.2017 அடுத்தகட்ட வழக்கு விசாரணைக்குப் பின்பு 25.10.2017 அன்று ஜேக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...