திறமை குறைவு என 2500 ஊழியர்களை தூக்கிய எஸ் வங்கி!!


தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் வங்கி எடுத்துள்ள முடிவு வங்கி ஊழியர்களை
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருவாய் வீழ்ச்சி, பொருளாதார ஏற்ற இறக்கம் மற்றும் ஊழியர்களின் திறமை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளிலும் இந்த நிலை தொடர ஆரம்பித்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கி உயர்மட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது எஸ் வங்கி இணைந்துள்ளது. திறமை குறைவு, நவீனமயமாக்கள் உள்ளிட்ட காரணங்களை முன்நிறுத்தி தனது அடிமட்ட பணியாளர்கள் 2500 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

எஸ் வங்கி தற்போது நாடு முழுவதும் 1020 கிளைகள் உள்ளன். மேலும் 800 கிளைகளை தொடங்க அந்த வங்கி முடிவு செய்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...