சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் ஆசிரியர்கள் தின விழாவில்
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசு சார்பில் வழங்கப்படுவதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன