தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரிய வழக்கி
ல் ஐகோர்ட் இன்று(செப்., 1) தீர்ப்பு வழங்குகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி மாநில தேர்தல் ஆணையம், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பை வழங்குகின்றனர். தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை கோர்ட் ஏற்கும் பட்சத்தில், உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
நீதிபதி கிருபாகரன் உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது