உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை களத்தில் நிற்க *SSTA* மாநில அமைப்பின் முடிவு !!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*அனைவருக்கும் இனிய காலை போராட்ட வணக்கம்.*

நயவஞ்சக அரசியல் _வியாதிகளின்_ சூழ்ச்சிக்கு இணங்கி பல சங்கங்கள் வெளியேறினாலும் உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை களத்தில் நிற்க *SSTA* மாநில அமைப்பின் முடிவு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது..


ஊதியமுரண்பாடு என்னும் நமது ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 2016 பிப்ரவரியில் சென்னை DPI யில் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். . எழுத்துபூர்வமான ஆவணம் பெற்றதால் போராட்டம் முடிவுக்கு வந்தது என்பதை மறக்க வேண்டாம்.

இளைய சங்கமாயினும் இளையோர் நிறைந்த சங்கம் , பாதிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது நமது சங்கம் என்பதை அனைவருக்கும் மெய்ப்பித்தோம்..

மீண்டும் சங்கம் கடந்து சென்னையில் ஏப்ரல் 2017ல் ஒருநாள் மாபெரும் அடையாள உண்ணாவிரதம் வள்ளுவர் கோட்டமே குழுங்கிட ஆர்ப்பரித்தோம்...

நாமெல்லாம் போராட்டத்திற்கு அஞ்சாதவர்கள்..
நமது குறிக்கோள் *இநிஆ* *ஊதியமுரண்பாடுகளை களைத்து ஊதியக்குழு அமல்படுத்துதல் மற்றும் CPS ஒழிப்பு* .


இன்றைய வட்டார மறியல் போராட்டத்திலும் அடுத்தடுத்து முன்னெடுக்கும் அனைத்து போராட்டத்திலும்
நமது *SSTA* உறுப்பினர்கள் அனைவரும் தவறாது களம் காணவும். .

 *ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவோம். .*

 *சிறை சிறை எனில் அதை நிறை நிறை...*
*தடை தடை எனில் அதை உடை உடை..*

தன்மானத்தோடு தலையை நிமிர்த்தி போராட, *களம்* நோக்கி வாரீர்.!!

 சிலிர்த்து எழுந்து வாரீர்...
சிறைசெல்லவும் தயங்காதீர்!

 *கோரிக்கைகளை வென்றெடுக்க கோடிக்கைகளை உயர்த்திடுவீர்!*


            மாநில அமைப்பு
                  *S S T A*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...