தமிழகத்தில் வரலாறு காணாத மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் !!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழைப்பொழிவு தற்போது உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை
பொய்த நிலையில், தமிழகம் முழுவதும் வறட்சி காணப்பட்டது.


இந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.



ஆனால், சராசரி அளவைவிட 38 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.



இந்தநிலையில் நேற்று இரவு தமிழகமெங்கும் மழை பரவலாக பெய்தது.
சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்துவாங்கியது.


அண்ணாசாலா, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதனால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று காலையும் சென்னையில் வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது.


தற்போது வெப்பச்சலனம் அம்ற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு அதிகப்படசமாகப் பெய்துள்ளது என்றும் இது கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத மழை அளவு என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தின் மழை அளவு 41 சதவிகிதம். இது வழக்கத்தை விட 29 சதவிகிதம் கூடுதல் ஆகும்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...