அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மேண்டலே பே ஓட்டல் அருகில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந் போது ஓட்டலின் 32 வது மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர், இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 50 பேர்
பலியாயினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது. தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அதிபர் மாளிகையில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அக்.4 ம் தேதி செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியாயினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது. தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அதிபர் மாளிகையில் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அக்.4 ம் தேதி செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.