உலகின் உயரமான கோளரங்கம்!!!

சீனாவின் டிபேட் நகரில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல்
படிப்புக்கான இடமாக புதிதாக கோளரங்கம் ஒன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான கோளரங்கத்தை வடிவமைக்க உள்ளனர். சுமார் 4,000 மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோளரங்கத்தில் இதுவரை எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு மீட்டர் - டையாமீட்டர் அளவுள்ள லென்ஸ் கொண்ட தொலைநோக்கி இதில் வைக்கப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சிகள், நட்சத்திரங்களைப் பற்றிய அறிவியல் தகவல்களுக்காக இந்த கோளரங்கம் அமைக்கப்படுவதாகத் தலைமை ஆராய்ச்சியாளர் வாக் ஜூனி தெரிவித்தார். மேலும் உலகில் அதிகமான உயரம்கொண்ட கோளரங்கம் இதுவாகும். மக்கள் இங்கு வருகை தந்து நட்சத்திரங்களைத் தெளியாக பார்வையிட முடியும். இந்த இடமும் அதற்கு ஏற்றாற்போல் குறைந்த காற்றுடன், குறைந்த மாசுடன் உள்ளது என்று தெரிவித்தார்.

இதன் பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு இந்த கோளரங்கத்தை தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...