மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிய அரசு சாரா
மருத்துவர்கள் நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மருத்துவர்களும் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில், அரசு மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்திற்கு முன் 10 நாட்களுக்கு மேலாக இப்போராட்டம் நடைபெறுகிறது. கோவை, மதுரையிலும் தற்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிய அரசு சாரா மருத்துவர்களை நேரடியாகத் தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும், அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முறையாகக் கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிலும் மருத்துவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வெளிப்படையாகக் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், முறைகேடாக நிரப்பிய இடங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சமூக நீதிக்கு எதிராக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல், நேரடியாக நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் முழக்கமிட்டனர். அரசாணை 132-ஐ அமல்படுத்த வேண்டும் எனவும், உடனடியாகப் போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர்களும் கண்கள், கைகளில் கறுப்புத் துணிகளைக் கட்டி நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் 3ஆவது நாளாக நேற்று (நவம்பர் 30) முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள் நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மருத்துவர்களும் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில், அரசு மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்திற்கு முன் 10 நாட்களுக்கு மேலாக இப்போராட்டம் நடைபெறுகிறது. கோவை, மதுரையிலும் தற்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிய அரசு சாரா மருத்துவர்களை நேரடியாகத் தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும், அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முறையாகக் கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிலும் மருத்துவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், வெளிப்படையாகக் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், முறைகேடாக நிரப்பிய இடங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சமூக நீதிக்கு எதிராக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல், நேரடியாக நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் முழக்கமிட்டனர். அரசாணை 132-ஐ அமல்படுத்த வேண்டும் எனவும், உடனடியாகப் போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர்களும் கண்கள், கைகளில் கறுப்புத் துணிகளைக் கட்டி நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் 3ஆவது நாளாக நேற்று (நவம்பர் 30) முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
