100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!!!

சென்னை : 'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட் வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட, 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள் ஆகும்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை, விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின் வடிவமைப்பான, கார்டோசாட் - 2 ரக செயற்கைக்கோள், இன்று காலை, 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டை, விண்ணில் செலுத்துவதற்கான, 28 மணிநேர, கவுன்ட் - டவுன், நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட்டில், இந்தியா - 3, அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள், 28 என, மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.

கார்டோசாட் - 2 செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள். செயற்கைக்கோள் வரிசையில், கார்டோசாட் - 2, ஏழாவது செயற்கைக்கோள்; இதன் எடை, 710 கிலோ. இதில், பூமியின் இயற்கை வளங்களை, பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பும் வகையில், சக்தி வாய்ந்த கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...