உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை!!!

உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் இருப்பதாகத்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய நீண்ட வருட ஆராய்ச்சிகளுக்கு பிறகு மாயன் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய நீர்வழிக்குகையை மெக்சிகோவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீர்வழிக்குகை சுமார் 347 கி.மீ தூரம் வரை காணப்படுகிறது. இந்த நீர்வழிக்குகை தான் உலகிலேயே மிகப்பெரிய நீர்வழிக்குகை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பகுதியில் மாயன்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் வகையில் சேதமடைந்த பாண்டங்கள் மற்றும் எலும்புகள் குகைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளன.

மாயன்கள் வாழ்ந்த இடம், சடங்குகள் மற்றும் அவர்களுடைய குடியேற்றங்கள் பற்றித் தெளிவாக நாம் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது, எனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...