பிளஸ் 2 பொது தேர்வில், நேரடியாக பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கான பதிவு, இன்று துவங்குகிறது. இந்த ஆண்டே கடைசியாக, நேரடி தேர்வு எழுத முடியும்!!!

வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பிளஸ் 2 பொது தேர்வில், தனித்தேர்வர்கள் நேரடியாக
பிளஸ் 2 தேர்வு எழுத, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.இதன் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு நிறைந்தவர்கள், இந்த தேர்வை எழுதலாம்.

இந்த ஆண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அடுத்த ஆண்டில் இருந்து, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே, 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 வை நேரடியாக எழுத, இந்த ஆண்டே கடைசிவாய்ப்பு என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில், இன்று முதல் வரும், 16 வரையிலும், பின், 18 முதல், 20ம் தேதி வரையில், அபராத கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம்.                  குறிப்பு:- 2016 ஜூன் மாதத்திற்கு முன் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அவர்கள் மட்டுமே நேரடியாக இந்த 12ம் வகுப்பு தேர்வு  எழுத முடியும். மற்றவர் 11ம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகே 12ம் வகுப்பு எழுத முடியும். மேலும் இலவச ஆலோசனைக்கு என்னை தொடர்பு கொள்ளவும். 12ம் வகுப்பு நேரடியாக தேர்வு எழுத கடைசி வாய்ப்பு உங்களுக்கு தெரிந்த  அனைவருக்கும் பகிரவும். இலவச ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண். மு.காதர், முதுகலை வணிகவியல் ஆசிரியர், திருவண்ணாமலை. செல். 94863 35786. இந்த பதிவு விளம்பர நோக்கத்திற்கு அல்ல. என்னால் முடிந்த ஒரு சின்ன வழிகாட்டுதல்  நோக்கத்திற்கு மட்டுமே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...