சென்னை:ஏர்செல் நிறுவனத்தின் சேவை தமிழகம் உட்பட நாடு முழுவதும்
, பல இடங்களில் திடீரென முடங்கியது. இதனால் ஏர்செல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஓரிரு இடங்களில் பொதுமக்கள் ஏர்செல் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏர்செல் மொபைல் சேவை திடீரென முடக்கம் குறித்து தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் கூறியது,மொபைல் போன் டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டசிக்கல், மற்றும் நிதி நெருக்கடி காரணமாக எங்களது சேவை முடங்கியது. அந்த நிறுவனங்களுடன் உச்சகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 3 நாட்களில் நிலைமை சீராக வாய்ப்பு உள்ளது என்றார்.
