ரயில்வேயில் அதிகரிக்கும் காலியிடங்கள்!


இந்திய ரயில்வேயில் கூடுதலாக 20,000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 90,000இல் இருந்து 1,10,000 ஆக அதிகரித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையில் 9,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் மே மாதம் வெளியிடப்படும். மேலும் எல்1 ,எல்2 பிரிவுகளில் 10,000 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 20,000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணப் பாதுகாப்பை மேம்படுத்துதல், தடையை நீக்குதல், மின்சாரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் போன்றவற்றை ஏற்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதற்கு முன்பு, ரயில்வே துறையின் குரூப் டி பிரிவில் 63,000 பேரும், லோகோ பைலட், தொழில்நுட்பப் பிரிவில் 26,000 பேரும் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு 15 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...